திருகோணமலை கொள்ளைச் சம்பவம்: இருவர் ஒரு மணி நேரத்திற்குள் கைது

arvloshan.com

திருகோணமலை, அனுராதபுர சந்தைக்கு அருகிலுள்ள மதுபானச்சாலையொன்றில் நேற்றிரவு (18) இடம்பெற்ற ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை, சம்பவம் இடம்பெற்று ஒரு மணித்தியாலத்திற்குள் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

நேற்றிரவு 9:45 மணியளவில் குறித்த மதுபானச்சாலைக்குள் புகுந்த இரு நபர்கள், டி-56 (T-56) ரக துப்பாக்கியைக் காட்டி ஊழியர்களை அச்சுறுத்தி பணத்தைக் கொள்ளையடித்ததுடன், மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக திருகோணமலை காவல்துறை நிலையத்திற்கு தொலைபேசி வாயிலாக தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, உடனடியாகச் செயற்பட்ட காவல் துறையினர், உப்பவெளி காவல்துறை பிரிவிற்குட்பட்ட தற்காலிக தங்குமிடம் ஒன்றில் வைத்து சந்தேகநபர்களை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் கிளிப்புஞ்சிமலையிலுள்ள வெடிபொருள் சேமிப்புக் கிடங்கில் கடமையாற்றும் உப்பவெளி காவல்துறை நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை சார்ஜன்ட்  ஒருவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

54 மற்றும் 61 வயதுடைய ஹக்மன பிரதேசத்தைச் சேர்ந்த இவ்விரு சந்தேகநபர்களிடமிருந்தும் கொள்ளையடிக்கப்பட்ட 11,500 ரூபாய் பணம், குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், டி-56 ரக துப்பாக்கி மற்றும் 29 தோட்டாக்கள் அடங்கிய தோட்டாக் கூடு (Magazine) என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் திருகோணமலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

தற்போதைய பாதாள உலகத் தலைவர்கள் ராஜபக்ஷ ஆட்சியில் உருவானவர்களே: சரத் பொன்சேகா

...

arvoshan.com

மானிப்பாயில் பொலிஸார் வழிமறித்தபோது இளைஞன் திடீர் உயிரிழப்பு!

...

arvoshan.com

ஹட்டனில் குப்பை மீள்சுழற்சி திட்டத்திற்கு எதிர்ப்பு: பெருந்தோட்ட மக்கள் போராட்டம்

...

arvoshan.com

எளிய முறையில் வீடு கட்ட தருவதாக மோசடி: கைதான இரு பெண்கள் விளக்கமறியலில் வைப்பு!

...

arvoshan.com

சவூதியில் இலங்கைத் தொழிலாளிக்கு மரண தண்டனை?: சஜித் கருணை கோரிக்கை

...

arvoshan.com

மோட்டார் வாகனப் பிரச்சினைகளுக்காக புதிய வாட்ஸ்அப் அவசர இலக்கம் அறிமுகம்

...

arvoshan.com

பசில் ராஜபக்‌ஷவை கைது செய்ய இன்டர்போல் உதவி நாடல்

...

arvoshan.com

சவூதி மரண தண்டனை வழக்கு: பிரதமர் மோடியின் உதவியைக் கோருமாறு மனோ கணேசன் வேண்டுகோள்

...

arvoshan.com

“15 மணித்தியாலம் உழைத்தேன்; காணிகளையும் விற்றேன்”: சந்திரிக்கா நெகிழ்ச்சி

...

arvoshan.com

கடுமையான மின்னல் அபாயம்: 09 மாவட்டங்களுக்கு 'சிவப்பு எச்சரிக்கை'விடுப்பு

...

arvoshan.com

திருகோணமலை மதுபானசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொள்ளை: இருவர் கைது!

...

arvoshan.com

ஒவ்வொரு வகுப்பறைக்கும் 'ஸ்மார்ட் போர்ட்' வழங்கப்படமாட்டாது: பிரதமர் ஹரிணி அமரசூரிய திட்டவட்டம்

...

arvoshan.com

முல்லைத்தீவில் நவீன தபால் அலுவலகம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறப்பு

...

arvoshan.com

சமூக ஊடகப் பிரச்சாரங்கள் குறித்து எச்சரிக்கை!: நுகர்வோர் அதிகாரசபை

...

arvoshan.com

டெலிகிராம் மூலம் இணையவழி நிதி மோசடி: படுவத்த பகுதியில் பெண் கைது!

...