“15 மணித்தியாலம் உழைத்தேன்; காணிகளையும் விற்றேன்”: சந்திரிக்கா நெகிழ்ச்சி

arvloshan.com

ஜனாதிபதி பதவி என்ற மாபெரும் அரசப் பொறுப்பையும் தாய்மையையும் ஒரே நேரத்தில் கையாள்வதில் எதிர்கொண்ட சவால்கள், கடுமையான உழைப்பு மற்றும் தனது பிள்ளைகளுக்கு வழங்கிய நற்பண்புகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பகிரங்க நிகழ்வொன்றில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

பொது நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், தனது அன்றாடப் பணிகள் காலை 7:30 மணிக்கு பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பிவைத்த பின்னரே ஆரம்பமாகும் என்றும், நள்ளிரவு வரையில் தொடர்ச்சியாக 15 மணித்தியாலங்கள் (15 Hours) வரை உழைக்க வேண்டியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“அவ்வாறு உழைப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், நாங்கள் நிர்ணயித்த இலக்குகளை அடைவது இலகுவானதாக இருக்கவில்லை; சவால்கள் நிறைந்ததாகவே இருந்தது. எனினும், அந்த இலக்குகளை அடைந்தே தீர வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்” என அவர் சுட்டிக்காட்டினார்.

அரச நிர்வாகத்தின் போது நிதி நெருக்கடிகள் காணப்பட்டபோதிலும், தனது குடும்பப் பராமரிப்பிற்காகவும் செலவுகளுக்காகவும் சொந்தக் காணிகளை விற்பனை செய்து கணக்குகளைச் சமநிலைப்படுத்தியதாகத் தெரிவித்த அவர், அரசாங்கத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு திறமையான அதிகாரிகளையே பெரிதும் சார்ந்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, தனது நம்பிக்கைக்குரிய ஒரு வீட்டுப் பணிப்பெண்ணைத் தவிர, உறவினர்கள் எவருக்கும் அரசாங்கத்தில் பதவிகள் வழங்கப்படவில்லை என்பதையும், அனைத்து நியமனங்களும் திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டன என்பதையும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

தனது பிள்ளைகளை வளர்த்தெடுத்த விதம் குறித்துத் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, தனது பிள்ளைகள் உயர்கல்வியைக் கற்றுத் தேர்ந்ததுடன், எவ்வித ஊழல் (Corruption) அல்லது சர்ச்சைகளிலும் சிக்காமல் வாழ்வது குறித்துத் தாம் பெருமிதம் கொள்வதாகக் கூறினார்.

“நீங்கள் எவ்வளவு கடினமான, சவால்கள் நிறைந்த வேலையைச் செய்தாலும், நீண்ட நேரம் உழைத்தாலும், உங்களது பணி வாழ்க்கையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் சரியாகத் திட்டமிட்டு ஒருங்கிணைத்தால், பிள்ளைகளுக்கு நற்பண்புகளையும் அவர்கள் நல்ல மனிதர்களாக வாழ்வதற்கான சரியான சூழலையும் உங்களால் நிச்சயமாக வழங்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

கன்னியாஸ்திரிகள் மடப் பாடசாலையில் பெற்ற கல்வியும், தனது பெற்றோரின் நேர்மையான நடத்தை முறைகளைக் கண்டு வளர்ந்தமையுமே தனக்கான நற்பண்புகளை உருவாக்கின என்றும், அதனையே தாம் தனது பிள்ளைகளுக்கும் கடத்தியுள்ளதாகவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் சுட்டிக்காட்டினார்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

தற்போதைய பாதாள உலகத் தலைவர்கள் ராஜபக்ஷ ஆட்சியில் உருவானவர்களே: சரத் பொன்சேகா

...

arvoshan.com

மானிப்பாயில் பொலிஸார் வழிமறித்தபோது இளைஞன் திடீர் உயிரிழப்பு!

...

arvoshan.com

ஹட்டனில் குப்பை மீள்சுழற்சி திட்டத்திற்கு எதிர்ப்பு: பெருந்தோட்ட மக்கள் போராட்டம்

...

arvoshan.com

எளிய முறையில் வீடு கட்ட தருவதாக மோசடி: கைதான இரு பெண்கள் விளக்கமறியலில் வைப்பு!

...

arvoshan.com

சவூதியில் இலங்கைத் தொழிலாளிக்கு மரண தண்டனை?: சஜித் கருணை கோரிக்கை

...

arvoshan.com

திருகோணமலை கொள்ளைச் சம்பவம்: இருவர் ஒரு மணி நேரத்திற்குள் கைது

...

arvoshan.com

மோட்டார் வாகனப் பிரச்சினைகளுக்காக புதிய வாட்ஸ்அப் அவசர இலக்கம் அறிமுகம்

...

arvoshan.com

பசில் ராஜபக்‌ஷவை கைது செய்ய இன்டர்போல் உதவி நாடல்

...

arvoshan.com

சவூதி மரண தண்டனை வழக்கு: பிரதமர் மோடியின் உதவியைக் கோருமாறு மனோ கணேசன் வேண்டுகோள்

...

arvoshan.com

கடுமையான மின்னல் அபாயம்: 09 மாவட்டங்களுக்கு 'சிவப்பு எச்சரிக்கை'விடுப்பு

...

arvoshan.com

திருகோணமலை மதுபானசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொள்ளை: இருவர் கைது!

...

arvoshan.com

ஒவ்வொரு வகுப்பறைக்கும் 'ஸ்மார்ட் போர்ட்' வழங்கப்படமாட்டாது: பிரதமர் ஹரிணி அமரசூரிய திட்டவட்டம்

...

arvoshan.com

முல்லைத்தீவில் நவீன தபால் அலுவலகம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறப்பு

...

arvoshan.com

சமூக ஊடகப் பிரச்சாரங்கள் குறித்து எச்சரிக்கை!: நுகர்வோர் அதிகாரசபை

...

arvoshan.com

டெலிகிராம் மூலம் இணையவழி நிதி மோசடி: படுவத்த பகுதியில் பெண் கைது!

...