சவூதி மரண தண்டனை வழக்கு: பிரதமர் மோடியின் உதவியைக் கோருமாறு மனோ கணேசன் வேண்டுகோள்

arvloshan.com

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் வாலிபரான அனோஜன் சிவராசாவின் விவகாரத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின்  உதவியைப் பெறுமாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் (TPA) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாகத் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள மனோ கணேசன், சவூதி அரேபியாவின் கிரீட இளவரசர் முஹம்மது பின் சல்மானுடன் இந்தியப் பிரதமர் மோடி மிக நெருங்கிய நட்புறவைக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இலங்கையின் மிக உயரிய விருதான 'ஸ்ரீ லங்கா ரத்னா' (Sri Lanka Rathna) கௌரவத்தைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, நாட்டின் நீண்டகால நண்பர் என்பதையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

"ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களே, அனோஜன் சிவராசாவின் இந்த ஆபத்தான நிலையை, உங்களின் நண்பரும் 'ஸ்ரீ லங்கா ரத்னா' விருதை வென்றவருமான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லுங்கள். இப் பிரச்சினைக்கு மனிதநேய அடிப்படையில் ஒரு தீர்வைப் பெற்றுத் தரும் வகையில், சவூதி கிரீட இளவரசர் சல்மானுடன் தனிப்பட்ட முறையில் தலையிடுமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுக்க வேண்டும்" என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த அனோஜன் சிவராசா, சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கருத்தொன்று இஸ்லாம் மார்க்கத்தையும் முஹம்மது நபியையும் இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டே இந்த வழக்கின் பின்னணியாகும். இலங்கையிலுள்ள மதச் சமூகங்களுக்கு இடையே இடம்பெற்ற இணையவழி விவாதத்தின் போதே இந்தக் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இக் குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த ஜூலை 15 ஆம் திகதி சவூதி நீதிமன்றம் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 3 மில்லியன் சவூதி ரியாஃபாத் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. தண்டனையைக் குறைக்குமாறு கோரி, இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஆதரவுடன் அவரது சட்டத்தரணி மேன்முறையீடு செய்தார்.

எனினும், அந்த மேன்முறையீட்டின் போது தண்டனை அதிகரிக்கப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தமக்கு அறியத்தரப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசாங்கம் அனோஜனுக்கு உதவுவதற்காக சட்ட ரீதியான மற்றும் இராஜதந்திர வழிகளை முன்னெடுத்து வரும் நிலையிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

தற்போதைய பாதாள உலகத் தலைவர்கள் ராஜபக்ஷ ஆட்சியில் உருவானவர்களே: சரத் பொன்சேகா

...

arvoshan.com

மானிப்பாயில் பொலிஸார் வழிமறித்தபோது இளைஞன் திடீர் உயிரிழப்பு!

...

arvoshan.com

ஹட்டனில் குப்பை மீள்சுழற்சி திட்டத்திற்கு எதிர்ப்பு: பெருந்தோட்ட மக்கள் போராட்டம்

...

arvoshan.com

எளிய முறையில் வீடு கட்ட தருவதாக மோசடி: கைதான இரு பெண்கள் விளக்கமறியலில் வைப்பு!

...

arvoshan.com

சவூதியில் இலங்கைத் தொழிலாளிக்கு மரண தண்டனை?: சஜித் கருணை கோரிக்கை

...

arvoshan.com

திருகோணமலை கொள்ளைச் சம்பவம்: இருவர் ஒரு மணி நேரத்திற்குள் கைது

...

arvoshan.com

மோட்டார் வாகனப் பிரச்சினைகளுக்காக புதிய வாட்ஸ்அப் அவசர இலக்கம் அறிமுகம்

...

arvoshan.com

பசில் ராஜபக்‌ஷவை கைது செய்ய இன்டர்போல் உதவி நாடல்

...

arvoshan.com

“15 மணித்தியாலம் உழைத்தேன்; காணிகளையும் விற்றேன்”: சந்திரிக்கா நெகிழ்ச்சி

...

arvoshan.com

கடுமையான மின்னல் அபாயம்: 09 மாவட்டங்களுக்கு 'சிவப்பு எச்சரிக்கை'விடுப்பு

...

arvoshan.com

திருகோணமலை மதுபானசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொள்ளை: இருவர் கைது!

...

arvoshan.com

ஒவ்வொரு வகுப்பறைக்கும் 'ஸ்மார்ட் போர்ட்' வழங்கப்படமாட்டாது: பிரதமர் ஹரிணி அமரசூரிய திட்டவட்டம்

...

arvoshan.com

முல்லைத்தீவில் நவீன தபால் அலுவலகம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறப்பு

...

arvoshan.com

சமூக ஊடகப் பிரச்சாரங்கள் குறித்து எச்சரிக்கை!: நுகர்வோர் அதிகாரசபை

...

arvoshan.com

டெலிகிராம் மூலம் இணையவழி நிதி மோசடி: படுவத்த பகுதியில் பெண் கைது!

...