எளிய முறையில் வீடு கட்ட தருவதாக மோசடி: கைதான இரு பெண்கள் விளக்கமறியலில் வைப்பு!

arvloshan.com

எளிய முறையில் தவணை முறையில் வீடுகளைக் கட்டித் தருவதாகக் கூறிப் பெருந்தொகை பணத்தை மோசடி செய்த தனியார் நிறுவனத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் எதிர்வரும் செப்டம்பர் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மிஹிரான சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட 30 மற்றும் 31 வயதுடைய இரு பெண்களுமே இவ்வாறு நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் (Nugegoda Magistrate's Court) ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நிறுவனத்தின் பிரதம விற்பனை மேலாளராகவும் செயல்பாட்டு அதிகாரியாகவும் கடமையாற்றிய இவர்க இருவருமே வியாழக்கிழமை (17) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்களிடம் பெருந்தொகை பணத்தைப் பெற்றுக்கொண்டு வாக்குறுதியளித்தபடி வீடுகளைக் கட்டித்தரத் தவறியமை தொடர்பில் குறித்த நிறுவனத்திற்கு எதிராக இதுவரை 245 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அத்துடன், சந்தேகநபர்களுக்குச் சொந்தமான நான்கு சொகுசு கார்களும் புலனாய்வு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்த நிதி மோசடி தொடர்பில் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் கடந்த ஜூலை 28 ஆம் திகதி ஏற்கனவே கைது செய்யப்பட்டு, எதிர்வரும் செப்டம்பர் 29 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

தற்போதைய பாதாள உலகத் தலைவர்கள் ராஜபக்ஷ ஆட்சியில் உருவானவர்களே: சரத் பொன்சேகா

...

arvoshan.com

மானிப்பாயில் பொலிஸார் வழிமறித்தபோது இளைஞன் திடீர் உயிரிழப்பு!

...

arvoshan.com

ஹட்டனில் குப்பை மீள்சுழற்சி திட்டத்திற்கு எதிர்ப்பு: பெருந்தோட்ட மக்கள் போராட்டம்

...

arvoshan.com

சவூதியில் இலங்கைத் தொழிலாளிக்கு மரண தண்டனை?: சஜித் கருணை கோரிக்கை

...

arvoshan.com

திருகோணமலை கொள்ளைச் சம்பவம்: இருவர் ஒரு மணி நேரத்திற்குள் கைது

...

arvoshan.com

மோட்டார் வாகனப் பிரச்சினைகளுக்காக புதிய வாட்ஸ்அப் அவசர இலக்கம் அறிமுகம்

...

arvoshan.com

பசில் ராஜபக்‌ஷவை கைது செய்ய இன்டர்போல் உதவி நாடல்

...

arvoshan.com

சவூதி மரண தண்டனை வழக்கு: பிரதமர் மோடியின் உதவியைக் கோருமாறு மனோ கணேசன் வேண்டுகோள்

...

arvoshan.com

“15 மணித்தியாலம் உழைத்தேன்; காணிகளையும் விற்றேன்”: சந்திரிக்கா நெகிழ்ச்சி

...

arvoshan.com

கடுமையான மின்னல் அபாயம்: 09 மாவட்டங்களுக்கு 'சிவப்பு எச்சரிக்கை'விடுப்பு

...

arvoshan.com

திருகோணமலை மதுபானசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொள்ளை: இருவர் கைது!

...

arvoshan.com

ஒவ்வொரு வகுப்பறைக்கும் 'ஸ்மார்ட் போர்ட்' வழங்கப்படமாட்டாது: பிரதமர் ஹரிணி அமரசூரிய திட்டவட்டம்

...

arvoshan.com

முல்லைத்தீவில் நவீன தபால் அலுவலகம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறப்பு

...

arvoshan.com

சமூக ஊடகப் பிரச்சாரங்கள் குறித்து எச்சரிக்கை!: நுகர்வோர் அதிகாரசபை

...

arvoshan.com

டெலிகிராம் மூலம் இணையவழி நிதி மோசடி: படுவத்த பகுதியில் பெண் கைது!

...