சமூக ஊடகப் பிரச்சாரங்கள் குறித்து எச்சரிக்கை!: நுகர்வோர் அதிகாரசபை

arvloshan.com

மருத்துவப் பரிசோதனை கட்டணங்கள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை முக்கிய விளக்கம்! சமூக ஊடகப் பிரச்சாரங்கள் குறித்து எச்சரிக்கை!

சமூக ஊடகங்களில் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கான கட்டணப் பட்டியல் என்ற பெயரில் பரப்பப்பட்டு வரும் விளம்பரம் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெளிவுபடுத்தலொன்றை வெளியிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் குறித்த அறிவித்தல் அதிகாரப்பூர்வமானது அல்ல எனச் சுட்டிக்காட்டியுள்ள அதிகாரசபை, அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துக் கட்டணங்களும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணங்கள் எனக் பொதுமக்கள் கருதி ஏமாறவேண்டாம் என எச்சரித்துள்ளது.

அதிகாரசபையின் உத்தியோகபூர்வ வர்த்தமானி உத்தரவுகளின் பிரகாரம், பின்வரும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு மட்டுமே அதிகபட்சக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது:

முழுமையான குருதிப் பரிசோதனை: ஒரு பரிசோதனை மற்றும் அறிக்கைக்கு அதிகபட்சமாக 400 ரூபாய் (வர்த்தமானி உத்தரவு இலக்கம் 67, 2186/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி, 2020 ஜூலை 29).

டெங்கு என்.எஸ்.1 அன்டிஜன் பரிசோதனை : ஒரு பரிசோதனை மற்றும் அறிக்கைக்கு அதிகபட்சமாக 1,200 ரூபாய் (மேற்படி வர்த்தமானி உத்தரவு).

கோவிட்-19 பி.சி.ஆர். பரிசோதனை : ஒரு பரிசோதனை மற்றும் அறிக்கைக்கு அதிகபட்சமாக 6,500 ரூபாய் (வர்த்தமானி உத்தரவு இலக்கம் 75, 2240/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி, 2021 ஆகஸ்ட் 12).

கோவிட்-19 விரைவு அன்டிஜன் பரிசோதனை : ஒரு பரிசோதனை மற்றும் அறிக்கைக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாய் (மேற்படி வர்த்தமானி உத்தரவு).

அதேவேளை, சமூக வலைத்தளங்களில் உலா வரும் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய மருத்துவப் பரிசோதனைகளான FBS, RBS, HbA1C, குருதி கொழுப்புப் பரிசோதனை (Lipid Profile), கல்லீரல் செயற்பாட்டுப் பரிசோதனை (LFT), சிறுநீரக செயற்பாட்டுப் பரிசோதனை (RFT), சிறுநீர்ப் பரிசோதனை (UFR), CRP, கணினி வரைவி வரைபடம் (CT), காந்த அதிர்வு வரைபடம் (MRI), அல்ட்ராசவுண்ட் (Ultrasound), மார்பகப் பரிசோதனை (Mammogram) மற்றும் எழும்பு அடர்த்திப் பரிசோதனை (DEXA) போன்றவற்றுக்கான கட்டணங்கள் அதிகாரசபையினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணங்கள் அல்ல என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் உத்தியோகபூர்வ மூலங்களிலிருந்து வெளிவரும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும், சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இது குறித்த மேலதிக தெளிவுபடுத்தல்களுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 1977 என்ற அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ள முடியும்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

தற்போதைய பாதாள உலகத் தலைவர்கள் ராஜபக்ஷ ஆட்சியில் உருவானவர்களே: சரத் பொன்சேகா

...

arvoshan.com

மானிப்பாயில் பொலிஸார் வழிமறித்தபோது இளைஞன் திடீர் உயிரிழப்பு!

...

arvoshan.com

ஹட்டனில் குப்பை மீள்சுழற்சி திட்டத்திற்கு எதிர்ப்பு: பெருந்தோட்ட மக்கள் போராட்டம்

...

arvoshan.com

எளிய முறையில் வீடு கட்ட தருவதாக மோசடி: கைதான இரு பெண்கள் விளக்கமறியலில் வைப்பு!

...

arvoshan.com

சவூதியில் இலங்கைத் தொழிலாளிக்கு மரண தண்டனை?: சஜித் கருணை கோரிக்கை

...

arvoshan.com

திருகோணமலை கொள்ளைச் சம்பவம்: இருவர் ஒரு மணி நேரத்திற்குள் கைது

...

arvoshan.com

மோட்டார் வாகனப் பிரச்சினைகளுக்காக புதிய வாட்ஸ்அப் அவசர இலக்கம் அறிமுகம்

...

arvoshan.com

பசில் ராஜபக்‌ஷவை கைது செய்ய இன்டர்போல் உதவி நாடல்

...

arvoshan.com

சவூதி மரண தண்டனை வழக்கு: பிரதமர் மோடியின் உதவியைக் கோருமாறு மனோ கணேசன் வேண்டுகோள்

...

arvoshan.com

“15 மணித்தியாலம் உழைத்தேன்; காணிகளையும் விற்றேன்”: சந்திரிக்கா நெகிழ்ச்சி

...

arvoshan.com

கடுமையான மின்னல் அபாயம்: 09 மாவட்டங்களுக்கு 'சிவப்பு எச்சரிக்கை'விடுப்பு

...

arvoshan.com

திருகோணமலை மதுபானசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொள்ளை: இருவர் கைது!

...

arvoshan.com

ஒவ்வொரு வகுப்பறைக்கும் 'ஸ்மார்ட் போர்ட்' வழங்கப்படமாட்டாது: பிரதமர் ஹரிணி அமரசூரிய திட்டவட்டம்

...

arvoshan.com

முல்லைத்தீவில் நவீன தபால் அலுவலகம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறப்பு

...

arvoshan.com

டெலிகிராம் மூலம் இணையவழி நிதி மோசடி: படுவத்த பகுதியில் பெண் கைது!

...