விசாரணைக்கு முன்னிலையானார் திஸ்ஸ குட்டியாரச்சி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி இன்றைய தினம் (16) பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையானார்.
மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பான வாக்குமூலத்தை வழங்குவதற்காகவே அவர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்த வேளையில், அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் தமக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
"அதிகாரிகளின் கேள்விகளுக்கு உட்பகுதியில் பதிலளித்த பின்னரே என்னால் விரிவாகப் பேச முடியும். நான் எவ்வித மோசடியிலோ அல்லது ஊழலிலோ ஈடுபடவில்லை" என நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு வளாகத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் அவர் தெரிவித்தார்.