மட்டக்குளியில் சொகுசு கார் மோதி கோர விபத்து – நால்வர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்

arvloshan.com

கொழும்பு, மட்டக்குளி - கந்தஉட பகுதியில் இன்று (16) இரவு இடம்பெற்ற கோர வீதி விபத்தில் நால்வர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் பலத்த காயமடைந்துள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று இரவு 7.30 மணியளவில் இத்துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது.

வத்தளைப் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாகப் பயணித்த சொகுசு கார் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அதே பாதையில் சென்று கொண்டிருந்த மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மீது அடுத்தடுத்து மோதி கடுமையான விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த ஆறு நபர்களும் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுள் நால்வர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். காயமடைந்த ஏனைய இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ள மட்டக்குளி பொலிஸார், விபத்துக்குக் காரணமான காரின் சாரதியைக் கைது செய்துள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

அரவிந்த டீ சில்வா, அவரது மனைவிக்கு பிடியாணை ! தாயாரின் இறுதிச்சடங்கில் சம்பவம் !!

...

arvoshan.com

இன்று நள்ளிரவு முதல் 48 மணிநேர புகையிரத வேலைநிறுத்தம்!

...

arvoshan.com

எர்பஸ் முறைகேடு வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

...

arvoshan.com

அடுத்த 10 நாட்களில் நாடு முழுவதும் கனமழை: வெள்ளப் பெருக்கு அபாயம்!

...

arvoshan.com

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வழக்கு ஒக்டோபர் 28 இல் மீண்டும் விசாரணை

...

arvoshan.com

சீன தூதுவர் - ரணில் விக்ரமசிங்க சந்திப்பு

...

arvoshan.com

கொழும்பில் 10 மில்லியன் ரூபாய் போலி காணி உறுதி மோசடி: 73 வயது முதியவர் கைது

...

arvoshan.com

நீதிமன்றில் ஞானசார தேரர் முன்னிலை: தலைமறைவுச் செய்திகள் மறுப்பு

...

arvoshan.com

விசாரணைக்கு முன்னிலையானார் திஸ்ஸ குட்டியாரச்சி

...

arvoshan.com

ஷிராந்தி ராஜபக்ச தொடர்பான குற்றச்சாட்டுக்கு ராஜபக்ச குடும்பம் மறுப்பு!

...

arvoshan.com

ஷிராந்தி ராஜபக்ச சிங்கப்பூர் பயணம்: நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அழைப்பாணை குறித்த குழப்பம்

...

arvoshan.com

இலங்கை - தாய்லாந்து: தொழிலாளர் ஒத்துழைப்பு மற்றும் விசா விலக்கு பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்

...

arvoshan.com

வருமான வரி செலுத்துவதற்கு செப்டம்பர் 30 இறுதி நாள்: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை!

...

arvoshan.com

சவுதி மேற்குப் பகுதி வாழ் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

...

arvoshan.com

தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்: நல்லூரில் வெண்கலச் சிலை திறப்பு!

...