கிரீன்லாந்தின் பாதுகாப்பு கட்டுப்பாடு அமெரிக்காவிடம்: ட்ரம்ப் அறிவிப்பு!
கிரீன்லாந்தின் பாதுகாப்பு மற்றும் ஏனைய தேவைகளுக்கான நிரந்தரக் கட்டுப்பாட்டை அமெரிக்கா பெற்றுக்கொண்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம், எவ்வித நிதியமைப்பும் இன்றி இலவசமாக இந்த உரிமையை அமெரிக்கா கைப்பற்றியுள்ளதாக அவர் உரிமைக்கோரியுள்ளார்.
தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக வலைத்தளப் பதிவில் கருத்து வெளியிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், இந்த புதிய உடன்படிக்கையானது கிரீன்லாந்தின் விவகாரங்களில் அமெரிக்காவிற்கு ஒரு நிரந்தர மற்றும் முக்கிய பங்களிப்பை வழங்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், அதிபர் ட்ரம்பின் இந்த உரிமைக்கோரல் தொடர்பாக டென்மார்க் அல்லது கிரீன்லாந்து அதிகாரப்பூர்வத் தரப்பிலிருந்து இதுவரை சுயாதீனமான உறுதிப்படுத்தல்கள் எதுவும் வெளியாகவில்லை.
அதேவேளை, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அமைவாக, எதிர்வரும் வாரம் இருதரப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்படவுள்ளதாக டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அரசாங்கங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரெடரிக்சன், கையெழுத்திடப்படவுள்ள புதிய ஒப்பந்தமானது நாட்டின் இறையாண்மையையும் , கிரீன்லாந்து மக்களின் சுயநிர்ணய உரிமையையும் எவ்விதத்திலும் பாதிக்காது என்றும், அவற்றை முழுமையாகப் பாதுகாக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.