CNN உள்ளிட்ட 3 முன்னணி ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகையில் தடை: டொனால்ட் டிரம்ப் அதிரடி!

arvloshan.com

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஊடகங்களுக்கு எதிரான தனது அதிரடி நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளார். தம்மைப் பற்றியும் தனது நிர்வாகத்தைப் பற்றியும் தவறான செய்திகளைப் பரப்புவதாகக் கூறி, முன்னணி செய்தி நிறுவனங்களான சி.என்.என் (CNN), எம்.எஸ் நவ் (MS NOW) மற்றும் பொலிட்டிகோ (Politico) ஆகியவற்றை வெள்ளை மாளிகையிலிருந்து (White House) உடனடியாக தடை செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் பிற செய்தி ஊடகங்களுக்கும் இத்தகைய தடைகள் விரிவாக்கப்படலாம் என அவர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப், "அமெரிக்க அதிபர், டிரம்ப் நிர்வாகம் மற்றும் அமெரிக்காவைப் பற்றி இந்த ஊடகங்கள் தொடர்ந்து புனைகதைகளையும் பொய்களையும் பரப்பி வருகின்றன. ஆகவே, சி.என்.என், எம்.எஸ் நவ் மற்றும் பொலிட்டிகோ ஆகிய ஊடகங்களை வெள்ளை மாளிகையிலிருந்து உடனடியாக தடை செய்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "போலியான செய்திகளைப் படித்துப் பார்த்து மக்கள் சலிப்படைந்துவிட்டார்கள். நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் போன்ற ஊடகங்களும் நேர்மையற்ற முறையில் செயல்படுகின்றன. நமது நாட்டிற்கு நேர்மையான செய்திகளே தேவை" எனத் தெரிவித்தார்.

அதிபர் டிரம்பின் இந்த அதிரடி அறிவிப்பு, அமெரிக்க அரசியலமைப்பின் முதலாவது திருத்தச் சட்டத்தின் கீழ் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இந்தத் தடை உத்தரவு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்து எவ்வித தெளிவான விளக்கமும் இதுவரை வழங்கப்படவில்லை. அத்துடன், வெள்ளை மாளிகையில் பணியாற்றும் குறித்த ஊடகங்களின் செய்தியாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

ஊடகங்களின் கடும் எதிர்ப்பு:

அதிபர் டிரம்பின் இந்தத் தீர்மானத்திற்குப் பாதிக்கப்பட்ட செய்தி நிறுவனங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக சி.என்.என் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "அரசாங்கத்தின் எவ்விதத் தலையீடும் இன்றி நடுநிலையான மற்றும் துல்லியமான செய்திகளை வழங்க அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் எங்களுக்கு முழு உரிமை அளித்துள்ளது. அதிபர் டிரம்பின் இந்த சட்டவிரோதத் தடையை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்" எனத் தெரிவித்துள்ளது.

அதேபோல், பொலிட்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் அரசியலமைப்பு வழங்கியுள்ள ஊடகச் சுதந்திர உரிமைகளைத் தற்காத்து, தொடர்ந்து நேர்மையான செய்திகளை மக்களுக்கு வழங்குவோம் என உறுதியளித்துள்ளது.

அதேவேளை, அதிபர் டிரம்பின் இந்த முடிவுக்கு அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பிட் ஹெக்செத் தனது பகிரங்க ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

சட்ட ரீதியான பின்னணி:

முன்னதாக, 1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற "ஷெரில் எதிர் நைட்" (Sherrill v. Knight) வழக்கில், ஊடகவியலாளர்களின் செய்தி அல்லது விமர்சனங்களைக் காரணம் காட்டி வெள்ளை மாளிகைக்குள் நுழைய அவர்களுக்குத் தடை விதிக்க முடியாது என அமெரிக்கக் கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

எனவே, அதிபர் டிரம்பின் இந்த தன்னிச்சையான தடை அறிவிப்பு நீதிமன்றத்தில் சட்டச் சவால்களைச் சந்திக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

சவூதி அரேபியாவில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை: மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்!

...

arvoshan.com

கிரீன்லாந்தின் பாதுகாப்பு கட்டுப்பாடு அமெரிக்காவிடம்: ட்ரம்ப் அறிவிப்பு!

...

arvoshan.com

ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் தாங்கி கப்பல் மீது ஈரான் தாக்குதல்: மத்திய கிழக்கில் தீவிரமடையும் பதற்றம்

...

arvoshan.com

ஆசியாவின் முதன்மைப் பணக்காரரானார் டிக்டொக் நிறுவனர் ஜாங் யிமிங்!

...

arvoshan.com

இந்தோனேசியாவில் கவிழ்ந்த படகில் இருந்து 3 சடலங்கள் மீட்பு: மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தல்

...

arvoshan.com

100 ஆண்டுகளுக்குப் பின் புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!

...

arvoshan.com

நியூயோர்க்கில் சாதனை: இலங்கை ஓவியர் இவான் பீரிஸின் கலைப்படைப்பு 6,40,000 டொலருக்கு ஏலம்!

...

arvoshan.com

ஈரானில் அமெரிக்கா போர் குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம்: ஐ.நா மனித உரிமைகள் பேரவை அறிக்கை

...

arvoshan.com

அமெரிக்காவின் 100% வரி அச்சுறுத்தல்: ரஷிய எண்ணெய் கொள்முதலில் பின்வாங்காத இந்தியா!

...

arvoshan.com

நைஜீரியாவில் விஷ மதுபானம் அருந்தி 48 பேர் பரிதாப பலி: 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

...

arvoshan.com

மெத் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு: பிஜியில் தேசிய HIV அவசரநிலை பிரகடனம்!

...

arvoshan.com

அமேசான் ஊழியர்களின் குறைந்தபட்ச மணித்தியால ஊதியம் 20 டொலராக உயர்வு

...

arvoshan.com

ஆஸ்திரேலியா அதிரடி: சர்வதேச மாணவர்கள் குடும்பத்தினரை அழைத்து வர தடை!

...

arvoshan.com

வட கொரியாவுக்கு இழப்பீடு விதிக்க தென் கொரிய நீதிமன்றம் உத்தரவு

...

arvoshan.com

இந்திய – பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் மோதல்: புதுடெல்லி கடும் எதிர்ப்பு!

...