இலங்கை
களனி பல்கலை மாணவன் உயிரிழப்பு: பல்கலை நிர்வாகத்தின் அசமந்தமே காரணம்
களனி பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவர் நேற்று இரவு திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவனை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நோயாளர்காவு வண்டி வசதியோ வேறு வாகனமோ பல்கலைக்கழகத்தில் இல்லாமையினால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்ட காரணத்தினாலேயே, இந்த மரணம் நிகழ்ந்ததாகத் தெரிவித்தே பல்கலை மாணவர்களினால் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.