டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் கரைக்கு கொண்டுவரப்பட்டன
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் பேரழிவுக்கான காரணங்கள் குறித்த விசாரணையை நிறுவனம் தொடங்கியுள்ளது.
கடந்த வாரம் விபத்துக்குள்ளாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் உலோகச் சிதைவுகள் ஹொரைசன் ஆர்க்டிக் கப்பலில் இருந்து கனடாவின் செயின்ட் ஜான்ஸில் புதன்கிழமை இறக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும, இந்த உலோகத் துண்டுகள் தார்ப்களால் மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள், நீர்மூழ்கிக் கப்பலின் தரையிறங்கும் சட்டமும், பின்புற உறையும் இடிபாடுகளில் காணப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
1912 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய விபத்தில் சிக்கி வடக்கு அட்லாண்டிக்கில் 3,800 மீ (12,500 அடி) ஆழத்தில் மூழ்கியிருக்கும் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதுடன், அதில் இருந்த ஐவரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், விபத்துக்குள்ளான டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த சிதைவுகள் புதன்கிழமை கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் பேரழிவுக்கான காரணங்கள் குறித்த விசாரணையை நிறுவனம் தொடங்கியுள்ளதாகவும், விசாரணைகள் அதன் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிப்புக்கான காரணம் என்ன என்பதை நிறுவ முயற்சிப்பதாகவும், எதிர்கால துயரங்களைத் தடுக்க பரிந்துரைகளை வழங்குவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.