இலங்கை
அனுமதியின்றி பனை மரங்களை எடுத்து சென்றவர் கைது
யாழ்ப்பாணத்தில் உரிய அனுமதி பாத்திரங்கள் இன்றி வாகனத்தில் சீவிய பனை மரங்களை எடுத்து சென்ற நபர் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்
வாகனத்தில் இருந்து 55 சீவிய பனை மரங்களை தாம் மீட்டுள்ளதாகவும் , அவற்றின் பெறுமதி சுமார் இரண்டு இலட்ச ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.