இலங்கைக்குப் பரிசாக அனுப்பட்ட யானை மீண்டும் தாய்லாந்துக்குத் திரும்புகிறது.
20 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்குப் பரிசாக அனுப்பட்ட யானை மீண்டும் அதன் சொந்த நாடான தாய்லாந்துக்குத் திரும்புகிறது.
29 வயது முத்து ராஜா என்ற அந்த யானை தாய்லந்தில் பிறந்தபோது சக் சுரின் (Sak Surin) என்று பெயரிடப்பட்டது. அது கடந்த 2001ஆம் ஆண்டு இலங்கையிடம் வழங்கப்பட்டது.
எனினும் அந்த யானை சரியாகப் பராமரிக்கப்படவில்லை என தெரிவித்து, அந்த யானையைத் தங்களிடமே ஒப்படைக்குமாறு தாய்லாந்து கடந்த ஆண்டு (2022) இலங்கையிடம் கேட்டது.
இதையடுத்து 4,000 கிலோகிராம் எடையிலான அந்த யானை நேற்று காலை கொழும்பிலிருந்து வர்த்தக விமானம் மூலம் தாய்லாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அதற்காக 700,000 டொலர் செலவிடப்பட்டதாகத் தாய்லந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"முத்து ராஜா"வை ஏற்றிய விமானம் நேற்று (ஜுலை 2) காலை 7.40 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.