பிரேசிலில் விமான விபத்து: 7 பேர் பலி
பிரேசிலில் மினாஸ் ஜெரைஸ் என்ற மாகாணத்திலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் இட்டாபேவா என்ற இடத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த போது அங்கு புயலுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானத்தின் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
உடனடியாக விமானத்திலிருந்து கடைசியாக சிக்னல் கிடைத்த இடத்துக்கு மீட்பு படையினர் மற்றும் பொலிஸார் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இதில் விமானம் விபத்துக்குள்ளானமை தெரியவந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த விமானி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது வரை இறந்த 3 பேரின் உடல்களை மீட்பு படையினர் மீட்டுள்ளதோடு மற்றவர்களின் உடல்களை தேடும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது