தாய்வான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
தாய்வானில் பதிவான நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆகவும் காணாமற்போனோரின் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 900 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தேசிய பூங்காவிற்குள் 50 பயணிகளுடன் பயணித்த 04 மினி பேருந்துகள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள நிலையில் பயணிகளின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
தாய்வானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது என த ரொய்ரர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், 700ற்கும் அதிகமானோர் படுகாயமடைந்த நிலையில் மீட்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update - தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - நால்வர் உயிரிழப்பு
UPDATE - தாய்வானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக த ரொய்ரட்ர்ஸ் யெ்தி வெளியிட்டுள்ளது. மேலும், 50ற்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் அடிபாடுகளுக்குள் சிக்கி வெளியில் வரமுடியாமல் தவிப்பவர்களை மீட்பு பணியினர் தொடர்ந்து வெளியில் கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபபட்டுள்ளனர்.