ஜப்பானில் 100 வயதைத் தாண்டியோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்து புதிய சாதனை!

arvloshan.com

நீண்ட ஆயுளுக்குப் பெயர்போன ஜப்பானில், நூறு வயது அல்லது அதற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை வரலாற்றில் முதன்முறையாக ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதன் மூலம் அந்நாடு புதிய சாதனைப் படைத்துள்ளது.

செப்டம்பர் 1-ஆம் நாளின் நிலவரப்படி, ஜப்பானில் நூறு வயது அல்லது அதற்கு மேற்பட்டோரின் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை 1,07,677 ஆக உயர்ந்துள்ளதாக ஜப்பான் நாட்டின் சுகாதார, தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7,914 அதிகமாகும். மேலும், இந்த எண்ணிக்கை தொடர்ந்து 56-வது ஆண்டாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

பெண்களின் ஆதிக்கம்

ஜப்பானிலுள்ள நூறு வயதைக் கடந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாவர்.

மொத்தம் உள்ளவர்களில் 94,298 பேர் பெண்கள் ஆவர். இது ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 87.6% ஆகும்.

வரலாற்றுப் பின்னணி

ஜப்பான் அரசாங்கம் இந்தத் புள்ளிவிவரங்களை முதன்முதலில் தொகுக்கத் தொடங்கிய 1963-ஆம் ஆண்டில், நூறு வயது கடந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 153 ஆக மட்டுமே இருந்தது. அதன் பின்னர் இந்த வளர்ச்சி வியத்தகு வகையில் உயர்ந்துள்ளது:

1981: 1,000-ஐத் தாண்டியது

1998: 10,000-ஐத் தாண்டியது

2012: 50,000-ஐத் தாண்டியது

தற்போது ஜப்பானின் ஒவ்வொரு 1 லட்சத்திற்கும் உள்ள மக்களில் 87.51 பேர் நூறு வயது கடந்தவர்களாக உள்ளனர். இதில் சிமானே மாகாணம் (Shimane Prefecture) ஒரு லட்சத்திற்கு 186.65 பேர் என்ற விகிதத்தில் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது.

நாட்டின் மூத்த குடிமக்கள்

கியோட்டோ நகைச் சேர்ந்த 114 வயதுடைய புயோ கிஷிமோட்டோ நாட்டின் மூத்த பெண்ணாக உள்ளார்.

குமாமொட்டோ நகைச் சேர்ந்த 112 வயதுடைய ஹிகாரு கட்டோ நாட்டின் மூத்த ஆணாகத் திகழ்கிறார்.

அரசின் கருத்து மற்றும் எதிர்கால சவால்கள்

இந்த மைல்கல்லை வரவேற்றுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் கெனிச்சிரோ உவேனோ , அதிகமான மக்கள் நீண்ட காலத்திற்குச் சுறுசுறுப்புடன் வாழ்வது ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்டார். அதேவேளையில், ஆரோக்கியமான நீண்ட ஆயுளின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளையில், இந்த சாதனை நிகழ்வானது ஜப்பான் தற்போது எதிர்கொண்டுள்ள கடுமையான சவால்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. குறைந்த பிறப்பு விகிதம் மற்றும் வேகமாக மூப்படைந்துவரும் சமுதாயம் காரணமாக, நாட்டின் தொழிலாளர் வர்க்கம் மற்றும் சமூகப் பாதுகாப்பு முறைமை ஆகியவற்றின் மீது அதிகரித்து வரும் அழுத்தம் தொடர்கிறது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

வட கொரியாவுக்கு இழப்பீடு விதிக்க தென் கொரிய நீதிமன்றம் உத்தரவு

...

arvoshan.com

இந்திய – பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் மோதல்: புதுடெல்லி கடும் எதிர்ப்பு!

...

arvoshan.com

காசாவில் கட்டடம் இடிந்து 20 பேர் பலி: 100 பேர் சிக்கியுள்ளதாக அச்சம்!

...

arvoshan.com

மக்காவை இலக்குவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் முயற்சி; சவூதி அரேபியா கடும் எச்சரிக்கை

...

arvoshan.com

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செய்தி சேகரிப்பின் போது தொலைக்காட்சி வானூர்தி விபத்து: மூவர் பலி!

...

arvoshan.com

கொங்கோ பாடசாலையில் ஏற்பட்ட கோரத் தீ விபத்து: 26 பேர் பரிதாபப் பலி!

...

arvoshan.com

லிபியாவில் விமான விபத்து: மூவர் உயர்தப்பினர்

...

arvoshan.com

டொனால்ட் ட்ரம்பின் சிறுவயது வீடு 1.93 மில்லியன் டொலருக்கு விற்பனை!

...

arvoshan.com

துருக்கியில் பாலியல் சிறுபான்மையினர் அமைப்புகள் மீது அதிரடி சோதனை: 60-க்கும் மேற்பட்டோர் கைது!

...

arvoshan.com

இந்தோனேஷிய கப்பல் விபத்து: 6 பேர் பலி; 129 பேரைக் காணவில்லை

...

arvoshan.com

சிலியில் சோகம்: முதியோர் இல்லத் தீ விபத்தில் 16 பேர் உயிரிழப்பு

...

arvoshan.com

தென்னாபிரிக்காவில் கொடூர வீதி விபத்து: 21 பேர் பரிதாபமாக பலி

...

arvoshan.com

லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் முதன்முறையாக பிரமாண்ட கங்கை ஆரத்தி விழா!

...

arvoshan.com

சவூதி, ஹோர்முஸ் தாக்குதல்கள்: கச்சா எண்ணெய் விலை 3 டாலருக்கும் அதிகமாக திடீர் உயர்வு!

...

arvoshan.com

வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணைச் சோதனை

...