இந்திய – பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் மோதல்: புதுடெல்லி கடும் எதிர்ப்பு!

arvloshan.com

வடக்கு அரபிக் கடலில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடற்படையின் முதன்மைப் போர்க்கப்பல் மீது பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பாகிஸ்தான் தரப்பின் இந்த "ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தொழில்முறையற்ற செயற்பாடு" காரணமாகவே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் கூறி, புதுடெல்லி தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளது.

நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து, புதுடெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் இடைக்காலத் தூதரை இந்திய வெளியுறவு அமைச்சு நேரில் அழைத்து தனது கண்டனத்தைத் தெரிவித்ததுடன், உரிய விளக்கத்தையும் கோரியுள்ளது.

1991ஆம் ஆண்டு ஒப்பந்தம் மீறல்

சர்வதேச கடற்பரப்பில் பாகிஸ்தான் கப்பல் அதிக வேகத்துடனும், பாதுகாப்பற்ற முறையிலும் இயக்கபட்டதே இம்மோதலுக்கு முதன்மைக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் இந்தியக் கப்பலுக்கு எவ்வித பெரிய சேதமும் ஏற்படவில்லை.

எனினும், பாகிஸ்தான் கடற்படைக் கப்பலின் இச்செயற்பாடானது, இரு நாடுகளுக்கும் இடையே படை நகர்வுகள்  மற்றும் பயிற்சிகள் குறித்த முன்னறிவிப்பு தொடர்பாக 1991ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தின் 10ஆவது பிரிவை நேரடியாக மீறும் செயலாகும் என இந்திய வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தூதருக்கு உத்தரவு

எதிர்காலத்தில் இத்தகைய ஆபத்தான சம்பவங்கள் மீண்டும் நிகழ்வதைத் தடுக்கும் பொருட்டு, இரு நாடுகளுக்குமிடையிலான ஒப்பந்த விதிகளை பாகிஸ்தானின் அனைத்து இராணுவப் பிரிவுகளும் கடுமையான முறையில் பின்பற்ற வேண்டும் என்பதை இஸ்லாமாபாத்திலுள்ள அதிகாரிகளுக்கு உடனடியாகத் தெரியப்படுத்துமாறு பாகிஸ்தான் இடைக்காலத் தூதருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த அதிகாரப்பூர்வ எதிர்ப்பறிக்கையை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சுக்கு உடனடியாகத் தெரியப்படுத்துமாறும் தூதரக அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

வட கொரியாவுக்கு இழப்பீடு விதிக்க தென் கொரிய நீதிமன்றம் உத்தரவு

...

arvoshan.com

காசாவில் கட்டடம் இடிந்து 20 பேர் பலி: 100 பேர் சிக்கியுள்ளதாக அச்சம்!

...

arvoshan.com

மக்காவை இலக்குவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் முயற்சி; சவூதி அரேபியா கடும் எச்சரிக்கை

...

arvoshan.com

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செய்தி சேகரிப்பின் போது தொலைக்காட்சி வானூர்தி விபத்து: மூவர் பலி!

...

arvoshan.com

ஜப்பானில் 100 வயதைத் தாண்டியோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்து புதிய சாதனை!

...

arvoshan.com

கொங்கோ பாடசாலையில் ஏற்பட்ட கோரத் தீ விபத்து: 26 பேர் பரிதாபப் பலி!

...

arvoshan.com

லிபியாவில் விமான விபத்து: மூவர் உயர்தப்பினர்

...

arvoshan.com

டொனால்ட் ட்ரம்பின் சிறுவயது வீடு 1.93 மில்லியன் டொலருக்கு விற்பனை!

...

arvoshan.com

துருக்கியில் பாலியல் சிறுபான்மையினர் அமைப்புகள் மீது அதிரடி சோதனை: 60-க்கும் மேற்பட்டோர் கைது!

...

arvoshan.com

இந்தோனேஷிய கப்பல் விபத்து: 6 பேர் பலி; 129 பேரைக் காணவில்லை

...

arvoshan.com

சிலியில் சோகம்: முதியோர் இல்லத் தீ விபத்தில் 16 பேர் உயிரிழப்பு

...

arvoshan.com

தென்னாபிரிக்காவில் கொடூர வீதி விபத்து: 21 பேர் பரிதாபமாக பலி

...

arvoshan.com

லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் முதன்முறையாக பிரமாண்ட கங்கை ஆரத்தி விழா!

...

arvoshan.com

சவூதி, ஹோர்முஸ் தாக்குதல்கள்: கச்சா எண்ணெய் விலை 3 டாலருக்கும் அதிகமாக திடீர் உயர்வு!

...

arvoshan.com

வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணைச் சோதனை

...