தெமட்டகொடையில் முச்சக்கர வண்டி சாரதி சுட்டுக்கொலை
தெமட்டகொடை, களு பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான நபர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த நபர் தொடர்பான விபரங்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டிற்கான பின்னணி குறித்து இதுவரை தகவல்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.