உளவியல் ரீதியான அமானுஷ்ய படமாக உருவாகிறது ‘மண்டவெட்டி’
இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் புதிய திரைப்படமாக 'மண்டவெட்டி' உருவாகி வருகின்றது. ‘டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ்’ (Tuskers Den Pictures) நிறுவனத்தின் சார்பில் அவரே தயாரித்துள்ள இத்திரைப்படம், உளவியல் சார்ந்த பதற்றம், நாட்டுப்புற நம்பிக்கைகள் மற்றும் மனித உணர்வுகளை ஒருங்கிணைக்கும் ஒரு இருண்ட அமானுஷ்யக் குற்றவியல் த்ரில்லராக (Crime Thriller) அமைக்கப்பட்டுள்ளது.
செஞ்சி எனப்படும் சக்திவாய்ந்த உள்ளூர் தெய்வத்தைச் சுற்றியுள்ள மர்மமான தொன்மைக்கதைகளை அடிப்படையாகக் கொண்டு, ஆழமான அச்சத்தையும் உணர்வுப்பூர்வமான தாக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் இதன் திரைக்கதை நகர்கிறது.
இத்திரைப்படத்திற்கு பிரகாஷ் மனிதன் ஒளிப்பதிவு செய்ய, தீபக் வேணுகோபால் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக கோமலி பிரசாத் நடித்துள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள இத்திரைப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.