அனோஜனின் குடும்பத்தை சந்தித்தார் ரிசாத் பதியுதீன்: சவூதி மன்னருக்கு கூட்டு மேன்முறையீடு செய்ய தீர்மானம்

arvloshan.com

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள இலங்கை நாட்டவரான அனோஜன் சிவராசாவின் குடும்பத்தினரை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

கல்முனை, நற்பிட்டிமுனையில் உள்ள அனோஜனின் இல்லத்திற்கு செப்டம்பர் 18ஆம் திகதி விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன், அனோஜனின் தாய், சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் பேசித் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

இது குறித்து அவரது ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள், இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகத்தினர் மத்தியிலும் பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, அனோஜனின் நிலைமை குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சவூதி அரேபிய மன்னர் ஆகியோருக்கு அவசர மேன்முறையீடு ஒன்றைச் செய்வதற்காக, அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றுதிரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.

அத்துடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) சபை இந்த விவகாரத்தில் தலையிட்டு, அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி சவூதி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும் தான் கேட்டுக்கொள்ளவுள்ளேன்.

இந்தச் சந்திப்பின் போது, அனோஜனின் விடுதலையை உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு முஸ்லிம் சமூகம் முழுமையான ஆதரவை வழங்கும் என எதிர்பார்ப்பதாக குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்தனர். அதற்குப் பதிலளித்த ரிசாத் பதியுதீன், அனோஜனின் குடும்பத்தாரின் கவலையில் முஸ்லிம் சமூகமும் பங்கெடுத்துக் கொள்கிறது என்றும், அவரை மீட்கும் முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்போம் என்றும் உறுதியளித்தார்.

மேலும், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு இந்த விவகாரம் குறித்துக் கலந்துரையாடியதாகத் தெரிவித்த அவர், அனோஜனின் வழக்கு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை அனைவரும் இணைந்து ஒரு குழுவாக முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளை, அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மரண தண்டனைத் தீர்ப்பு குறித்து இலங்கை வெளிநாட்டமைச்சினால் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

அனோஜன் விடுதலை: கட்சித் தலைவர்களின் கூட்டுக் கோரிக்கைக்கு கஜேந்திரகுமார் வலியுறுத்து

...

arvoshan.com

சமூக வலைத்தள போதைப்பொருள் காணொளி: 11 வயது சிறுவன் பொலிஸ் பாதுகாப்பில்

...

arvoshan.com

‘எனது வாகனம், எனது எரிபொருள்’ என பொது வீதியில் கூற முடியாது: அமைச்சர் பிமல் ரத்நாயக்க எச்சரிக்கை!

...

arvoshan.com

அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கிட சவூதி அரேபியாவிடம் அலி சப்ரி கோரிக்கை!

...

arvoshan.com

சுரேஷ் சாலேயின் மனு மீதான தீர்மானம் நவம்பர் 27 இல் அறிவிப்பு!

...

arvoshan.com

வேலைநிறுத்தத்திற்கு மத்தியிலும் சேவை வழங்கிய ரயில்வே ஊழியர்களுக்கு பிரதி அமைச்சர் பாராட்டு!

...

arvoshan.com

விமல் வீரவன்சவின் உரை நீதிமன்ற அவமதிப்பா? விசாரணைக்கு உத்தரவு!

...

arvoshan.com

சவூதியில் மரண தண்டனை எதிர்கொள்ளும் அனோஜனின் வழக்கு: இலங்கை வெளிவிவகார அமைச்சு விளக்கம்

...

arvoshan.com

போலி லேபிள் பழச்சாறு விநியோகம்: வத்தளை நபருக்கு ரூ. 42,000 அபராதம்

...

arvoshan.com

உள்நாட்டு மிதக்கும் சூரியமின் நிலையம் திறப்பு: ஆண்டிற்கு $3 மில்லியன் சேமிப்பு!

...

arvoshan.com

வங்காள விரிகுடாவில் புயல் சின்னம்: ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு எச்சரிக்கை!

...

arvoshan.com

அதிவேகப் பாதைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: இன்று நள்ளிரவு முதல் அமல்!

...

arvoshan.com

கடலில் தவறி விழுந்த துறைமுக வழிகாட்டி இலங்கை கடற்படையினரால் மீட்பு

...

arvoshan.com

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மேம்பாட்டிற்கு 336 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

...

arvoshan.com

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மகனை காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம் தாயார் கோரிக்கை

...