யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல்!
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீராகாரமின்றி அகிம்சை வழியில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் முப்பத்தொன்பதாவது (39) ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.
இதன் ஒரு கட்டமாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பிரதான வளாகத்தில் தியாக தீபத்தின் திருவுருவப் படத்திற்குச் சுடரேற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இப் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பெருமளவிலான மாணவர்களும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் கலந்துகொண்டு, மலர்களைத் தூவித் தியாக தீபத்திற்குத் தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.