சர்வதேசம்
இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளிவிவாகர அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷிக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசு ரகசியங்கள் கசிந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர்களுக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது சிறப்பு நீதிமன்ற நீதிபதி அபுல் ஹஸ்னத் சுல்கர்னைன் இன்று (30) இந்த முடிவை அறிவித்தார்.