சர்வதேசம்
இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் முன்னிலை: ஆட்சி அமைக்கப் போவது யார்?
பாகிஸ்தானின் பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகள், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சியின் ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர்களை முன்னிலையில் வைத்துள்ளது.
தேசிய சட்டமன்றத் தொகுதிகளில் 101 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் 93 பேர் பிடிஐ ஆதரவு வேட்பாளர்கள்.
இது 75 இடங்களில் வெற்றி பெற்ற முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியை விட அவர்களை முன்னிலைப்படுத்துகிறது.
எவ்வாறாயினும் யார் ஆட்சி அமைப்பது என்பது தெளிவாகத் தெரியவில்லை.